Monday, April 4, 2011

எருமையின் வாக்கு வங்கி

எருமையின் வாக்கு வங்கி

அதிகாலையில் அய்யா என்ற கரகர குரலில் யாரோ என் வீட்டு பின்புறத்திலிருந்து அழைப்பதுபோல இருந்தது. யாராக இருக்கும் என்று வீட்டு தோட்டத்திற்கு சென்றேன். அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. தோட்டத்தில் கட்டியிருந்த எருமை மாடுதான் அய்யா என அழைத்திருந்தது என்பது எனக்கு அது அடுத்து என்னை நோக்கி பேச துவங்கியபோதுதான புரிந்தது.

எனது ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு அது என்னதான் சொல்கிறது என கேட்கலானேன்.

அது தொடர்ந்தது

அய்யா வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி என்னை கயிற்றில் கட்டி வைக்காதீர்கள் நான் ஓட்டு போட போக வேண்டும் என்ற போது எனக்கு ஆச்சரியம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் எருமைக்கெல்லாம் ஓட்டு உரிமை அளித்து விட்டார்களா ? என்று.

சரி அதை எருமையிடமே கேட்டு விடலாம் என்றால் நாமோ மனிதன் போயும் போயும் ஒரு எருமையிடமா நமது சந்தேகத்தை கேட்பது என்று தன்னுணர்வு தடுத்தது.

இதை புரிந்து கொண்ட எருமை, அய்யா மனிதர்கள் தன்னுணர்வு மிக்கவர்கள் மற்றும் இந்த உலகிலேயே மனிதர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற அபிப்பிராயம் கொண்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்களது சந்தேகத்திற்கு விடை கூற நான் விரும்புகிறேன் என்றது.

எனக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் இருப்பினும் பேசாமல் இருந்தேன்.

எருமை தொடர்ந்தது வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அன்று எனது வாக்கினை செலுத்த வேண்டி இருப்பதால் அன்று எனக்கு விடுமுறை வேண்டும் என்றது.

இதற்கு மேலும் எனக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எருமையிடம் கேட்டேவிட்டேன். உங்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு விட்டதா ? ஆச்சரியமாக இருக்கின்றதே ? உங்களுக்கு எல்லாம் ஓட்டு போடும் உரிமையை எப்போது சட்டமாக்கினார்கள் ? நீங்கள் எப்படி ? யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ?

எனது அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட எருமை தனது கரகர குரலால் சிரித்துக்கொண்டது.

அது பதில் சொல்லத் தொடங்கியது

உங்களை போன்ற மனிதர்கள் இந்த உலகம் உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு மனிதர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று உங்களுக்கு ஒரு தலைமையினை ஏற்படுத்துவதற்காக தேர்தல் முறையை கொண்டு வந்து இருக்கின்றீர்கள். ஆனால் நாங்களும் உங்களை போன்றுதானே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

எங்களுக்கான உரிமைக்கா போராடும்ஒரு தலைமை எங்களுக்கு வேண்டாமா ? உலகம் அனைத்து உயிர்களுக்காகவும்தான் படைக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது மனிதர்கள் மிகுந்த சுயநலமாக தங்கள் இனத்தை காத்துகொள்வதற்காக நிறைய திட்டங்களை வகுக்கின்றீர்கள். என்றாவது எங்களது வளர்ச்சிக்காக நீங்கள் திட்டங்கள் வகுத்ததுண்டா ?

அதிலும் மனிதர்கள் பகுத்துண்டு வாழ வேண்டும் என்கிற கொள்கைக்கு எதிரானவர்களாக இருக்கின்றார்கள். பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்து அதை மேலும் மேலும் பெருக்குவதிலேயே காலத்தை கழிக்கின்றார்கள். அதனால் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயலுகின்றார்கள்.

எங்களை பாருங்கள் நாங்கள் எங்களுக்கு என்று வீடு கேட்கிறோமா ?

எங்களுக்கு என்று மகிழுந்து, பேருந்து என போக்குவரத்து சாதனங்களை கேட்கிறோமா ?

மனிதர்களை போன்று ஆடம்பர பொருட்களை விரும்புகிறோமா ?

மனிதர்களை போன்று அவரிடம் உள்ள பொருள் எங்களிடம் இல்லையே என பொறாமை படுகின்றோமா ? அல்லது வருத்தப்படுகின்றோமா ? பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என்று சண்டையிடுகிறோமா ?

எங்களது தேவையெல்லாம் அந்தந்த வேளைக்கான உணவு மட்டும்தான் வேறு என்ன உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் ? அந்த உணவை போட்டதற்காக நாங்கள் உங்களுக்கு எங்களது உழைப்பையும், எங்களது பாலையும் தருகிறோமே. அப்படியிருந்தும் எங்களுக்கும் ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களாகிய உங்களுக்கு தோன்றியதா ?

ஆகவேதான் நாங்களே எங்களது மிருகங்களுக்கான தலைமையை தேர்ந்தெடுக்க ஒரு தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். இந்த எங்களது தேர்தலில் மிருகங்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியது எருமை.

எனக்கு எருமை சொன்னதில் உள்ள உண்மை சுட்டாலும். சரி இவர்களுக்கு தலைவராக யார் வருவார் எனும் ஆவல் மேலும் அதிகரித்தது. அதை எருமையிடமே கேட்டு விட்டேன்.

சரி யார்தான் உங்களது தலைவராக வருவார்கள் ? எந்த எந்த மிருகங்கள் தலைமை பதவிக்கு போட்டியிடுகின்றன என கேட்டேன்.

எருமை பொறுமையாக பதிலளித்தது. எங்களது மிருங்களை காப்பதாக நரி இனம் உறுதி கூறி உள்ளது. அதில் நான்கு நரிக்கட்சிகள் உள்ளன. அவற்றில் எந்த நரி சரியானது என முடிவு செய்து அந்த நரியினை எங்களது தலைவராக தேர்ந்தெடுப்போம் என்றது.

எனக்கு தலை சுற்றியது. என்ன மிருகங்களுக்கும் தலைவர்களாக நரிகள்தானா ?


ஆக்கியோன் -
நக்கினம் சிவம்

Tuesday, February 8, 2011

அதிசயம் - காணும் காட்சி



அன்பு சகோதரர்களே,

என்னுடைய மகன் அரவிந்தன் (ஏழம் வகுப்பு படிக்கின்றான்)
கணிப்பொறியில் வரைந்த ஓவியம்
இதில் ஒரு அதிசயம் உள்ளது.



இந்த ஓவியத்தில் உள்ள Arvindh என்ற எழுத்துக்களை

ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் உற்று பார்க்கவும்

பின்னர் உங்கள் கண்களை சுவரின் வெற்று பகுதியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ (பெரியது)

உற்று நோக்கவும் உங்களுக்கு ஒரு அதிசயம் தென்படும்.

அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்



ஓவியம் வரைந்தவர் - அரவிந்தன்

Thursday, February 3, 2011

தெரிந்த வழிபாடுகளும் - தெரியாத செய்திகளும்

தெரிந்த வழிபாடுகளும் - தெரியாத செய்திகளும்

அன்பு சகோதர அன்பர்களே

நமது தமிழர்களின் வழிபாட்டு முறைகள் பலவிதமாக
காலம் காலமாக இருந்து வருகின்றன.

பல வழிபாட்டு முறைகள் காலவெள்ளத்தில்
மறைந்து போனாலும், ஒரு சில வழிபாட்டு முறைகள்
இன்றைக்கும் அந்த வழிபாட்டு முறைகள் எதற்காக தோன்றியதோ
அதன் சிறப்பை விட்டு வெகு தொலைவிற்கு அதன் நிலை மாறி
வேறு திசையில் பயணம் செய்வதை நம்மில் பலர் அறியாமல் உள்ளனர்.

அப்படி திசை மாறி பயணப்பட்டுக் கொண்டிருக்கும்
நமது பழந்தமிழர் வழிபாட்டு முறைகளை ஆராய்வோம்.

முதலில் நமது கலாச்சாரத்தை பற்றி முழுவதுமாக
உணர வேண்டுமென்றால் கிராம புறங்களில் நடைபெறும்
கிராம தெய்வ வழிபாட்டை பற்றி தெரிந்தால் மட்டுமே
முழுமையாக உணர முடியும்.

அந்த வகையில்

முனீஸ்வரன், காட்டேரி, சுடலை மாடன், மாடசாமி, ஐயனார்
போன்ற தெய்வங்களின் வழிபாடு எப்படி தோன்றியது,
அந்த வழிபாட்டு முறை தோன்றும்போது எப்படி இருந்தது
பன்னர் அது எப்படி உருமாறியது என்பதை பற்றி பார்ப்போம்.

முனீஸ்வரன்
முனீஸ்வரன் வழிபாடு இன்றைக்கும் ஒரு சில குடும்பங்களில்
பரம்பரையாக தொடர்ந்து வருகின்றது. இனறைக்கும்
முனீஸ்வரன் வழிபாட்டில் உருவம் வைத்து வணங்கப்படுவது இல்லை.

சரி முனீஸ்வரன் என்பவர் யார் என்று பார்த்தால்
காடுகளில் தவம் இயற்றி சிவ நிலை அடைந்த முனிவர்களே
முனீஸ்வரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அவர்களின் தவ ஆற்றலின் காரணமாக
இவர்களை சுற்றி எப்போதும் ஒரு மின்சார அதிர்வுகள் இருக்கும்
அந்த அதிர்வுகளின் உள்ளே யாராவது தெரியாமல் நுழைந்து விட்டால்
அவர்களை அந்த அதிர்வுகள் மயக்கமுறச் செய்யும்,
தன்னிலை மறக்கச் செய்யும்.

அப்படிப்பட்ட அதிர்வலைகளில் நுழைந்தவர்கள்
தங்களை யாரோ தாக்கியது போன்று உணர்ந்து
அவ்விடம் வருவதை தவிர்த்து மற்றவர்களிடமும்
அவ்விடத்தில் முனி இருக்கின்றது. அது நம்மை தாக்கிவிடும்
என்று பயமுறுத்தி உள்ளனர்.

ஆனால் உண்மையை உணர்ந்த பலர்
அந்த சிவ நிலை பெற்ற முனிவர்களன அவர்களை
முனி ஈஸ்வரன் என வழிபட தொடங்கினர்
அதுவே நாளடைவில் முனீஸ்வரன் வழிபாடாக நிலைபெற்றது.

ஆக முனீஸ்வரன் வழிபாடு என்பது தவத்தில் சிறந்த
ஞானிகளை அதாவது சித்தர்களை வழிபடும் முறையே.

காட்டேரி பற்றி
அடுத்த பதிவில்
சந்திப்போம்

அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்